Thursday, March 6, 2008

பெண்மை வாழ்க


பெண் பூவை போற்றுவோம்!
பெண் தீபம் ஏற்றுவோம்!
பெண்களை முன்னேற்றுவோம்!
உலகை மாற்றுவோம்!

இந்திர லோகம் ஏறி
ஆடும் பெண் அன்று! சுற்றி சுற்றி
ஆடும் பெண் அன்று!

சந்திர லோகத்தையே
ஆளும் பெண் இன்று!
வெற்றி பெற்று ஆளும்
பெண் அன்று!

கல்வியே கற்பெனும்
புது கீதம் பாடுவோம்!
கனிவுடன் பண்பிலே
புது வாழ்வை தேடுவோம்!

கோவில் குளம் தனில்
மீன்கள் அலையலாம்-தண்ணீரில்
மீன்கள் நனையலாம்!

தாமரை பூக்கள் தான்
நீரில் நனையுமா?-குளத்தின்
நீரில் இணையுமா?

கண்ணீர் ஊற்றினால்
அகல் விளக்கு எரியுமா?
கல்வியை நம்பினால்
கவலை இல்லை தெரியுமா?
பெண்ணுக்கு
கவலை இல்லை தெரியுமா!

வைரபாரதி

No comments: