Thursday, March 6, 2008

பெண் உரிமை பாடல்--வைரபாரதி


ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம்
பராஷக்தி பெண்மையை போற்றுடுவோம்!
பாரதி பாடிவைத்தான்
பெண்ணுரிமை ஷக்தியை காத்திடுவோம்!

மங்கையர் தெய்வமேனும்
மானிடரின் பாங்கினை போற்றிடுவோம்!
கல்லென நிற்க வைத்தால்
கயவர்கள் போக்கினை தூற்றிடுவோம்!

ஆணும் பெண்ணும் ஒன்றேனும்
அர்த்தநாரி சிவனை போற்றுகின்றோம்!
பெண்களின் பேச்சுரிமை பொங்கிவர
காதினை மூடுகின்றோம்!

வீட்டுக்குள் பூட்டி வைக்கும்
காலங்களை நாமிங்கு விரட்டி விட்டோம்!
வர்த்தக ரீதியிலே பெண் மானத்தை
காற்றிலே விட்டு விட்டோம்!

கற்பங்கள் ஆணுக்கில்லை
என்றும் அது பெண்மையில் கண்டு வந்தோம்!
பெண் ஷக்தி மிஞ்சுகின்ற
பாரதத்தில் பூமியை வெற்றி கண்டோம்!

வைரபாரதி

No comments: