Thursday, March 6, 2008

என் அம்மாவுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்


தீபம்..! ஒளி மறந்த
தீபம்!

இருள் நிறைந்த போதும்
இவள் இதயம் போதும்!

கீதம் மௌனங்களின் கீதம்!

கேட்காத பாடல்
அவள் தாலாட்டு தானே!
தீராத தாகம்
தாய் பாலோடு தானே!

கண்ணோவியம் இரவானதா
கண்ணீர் எந்தன் உறவானதா
சிறகென்னை மண்ணில்
உதிர்த்து விட்டு
பறவை அவள் பறந்தாலம்மா

நூறாண்டு காலம்
வாழ்வை என்று சொன்னாள்!
நாலாண்டு தானே
வாழ்க்கை என்று வந்தாள்!

தாய் பாசம் ஓர்
புத்த மனம் தான்!
தாய் பிரிவு ஓர்
போதி மரம் தான்!

சாகாமல் என்றும் வாழ்வதற்கு
கவிதை அவள் தந்தாளம்மா !

வைரபாரதி

No comments: